சிங்கள படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - வந்தாச்சு சரத்குமார் அறிக்கை!

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் உயிர்ப்பலி ஆக்கப்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஒட்டுமொத்த தேசத்தின் கண்டன குரலை மத்திய அரசு புறக்கணித்து வருவதைபோல, தமிழக மீனவர் பிரச்சினையிலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தே வருவது கண்டிக்கத்தக்கதாகவும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.
அந்த வகையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு இழைத்துவரும் அநீதிகளின் தொடர்ச்சியாக, சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
மத்திய அரசு இனியும் மெத்தன போக்கை கடைப்பிடிக்காமல் இலங்கை அரசுடன் கண்டிப்பான பேச்சுவார்த்தை நடத்தி இத்தகைய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைப்பட்டிருக்கும் தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications