டெல்லியில் தொடரும் சம்பவங்கள்: பீர்பாட்டிலால் பெண்ணின் முகத்தில் குத்திய குடிகார கும்பல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பீர் பாட்டிலால் பெண்ணைத் தாக்கிய 5 பேர் கொண்ட குடிகார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பிரபல கான் மார்க்கெட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் ஒரே குடும்ப்த்தைச் சேர்ந்த 8 பேர் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பால்னோர் பெண்கள். ஹோட்டலில் அவர்கள் அமர்ந்த இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் 5 இளைஞர்கள் பீர் குடித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் எதிரே அமர்ந்தவுடன் அருவருக்கத்தக்க கிண்டல்களை அள்ளி வீசி தொந்தரவு செய்திருக்கின்றனர்.

இதில் பொறுமை இழந்த பெண் ஒருவர் குடிகார கும்பலில் ஒருவனை கன்னத்தில் காட்டமாக அறைந்திருக்கிறார். மப்பில் இருந்த அந்த கும்பல் பதிலுக்கு பீர் பாட்டிலால் அப்பெண்ணின் முகத்தில் தாக்கியிருக்கின்றனர். இதில் அப்பெண் படுகாயமடைந்திருக்கிறார். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் குடிகார கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்துமே ஹோட்டலில் இருந்த சிசிடிவி காமிராவில் முழுவதுமாக தெளிவாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இரவு முழுவதும் டெல்லி போலீசார் அந்த குடிகார கும்பலை தேடி கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த குடிகார கும்பலில் மணீஷ் என்பவன் வசந்த் நகரில் உள்ள சிபிஐ காலனியில் வசித்து வந்திருக்கிறான். விகாஸ் என்ற விக்கி, மாடலாக இருக்கிறான். இவன் அண்மையில்தான் மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறான். இவர்களுடன் ரோகித் ஷெகல், கமல்தீப், பரம்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் டெல்லி பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி பயில்கின்றனர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+