அம்பாசமுத்திரத்தில் 2 பலாத்காரங்கள்... 10ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
அம்பாசமுத்திரம்: நெல்லை அருகே அம்பாசமுத்திரத்தில் 10ம் வகுப்பு மாணவியும், 3 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரும், பத்தாம் வகுப்பு மாணவரும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த ஹரிகரன் மகன் பாலமுருகன். இவர் நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அம்பையில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பாலமுருகன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலத்காரம் செய்தார். பின்னர் அவரிடம் மாணவி திருமணம் செய்ய வலியுறுத்திய போது அவருக்கு பாலமுருகன் மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அம்பை ம்களிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜர்மின் லதா வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.
இதே போல் அம்பை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணி. வயது 16. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசி்த்து வரும் 3 வயது சிறுமியிடம் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த அவர் சிறுமியை பலத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் ஓட முயன்ற மணியை அவர்கள் பிடித்து அம்பை மகளிர் போலீசில் ஓப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவர் மணியை கைது செய்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications