Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பாசமுத்திரத்தில் 2 பலாத்காரங்கள்... 10ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

அம்பாசமுத்திரம்: நெல்லை அருகே அம்பாசமுத்திரத்தில் 10ம் வகுப்பு மாணவியும், 3 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரும், பத்தாம் வகுப்பு மாணவரும் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த ஹரிகரன் மகன் பாலமுருகன். இவர் நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அம்பையில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பாலமுருகன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலத்காரம் செய்தார். பின்னர் அவரிடம் மாணவி திருமணம் செய்ய வலியுறுத்திய போது அவருக்கு பாலமுருகன் மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அம்பை ம்களிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜர்மின் லதா வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.

இதே போல் அம்பை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணி. வயது 16. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசி்த்து வரும் 3 வயது சிறுமியிடம் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த அவர் சிறுமியை பலத்காரம் செய்ய முயன்றார்.

சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் ஓட முயன்ற மணியை அவர்கள் பிடித்து அம்பை மகளிர் போலீசில் ஓப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவர் மணியை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+