சேலத்துல என்னமோ நடக்குது? வீரபாண்டி ராஜாவுடன் அன்புமணி திடீர் ஆலோசனை
சேலம்: சேலம் திமுகவின் வீரபாண்டி ராஜாவுடன் திடீரென ஆலோசனை நடத்தி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமகவின் அன்பு மணி ராமதாஸ்.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகும் தம் வசமே திமுக இருக்கும்... இருக்க வேண்டும் என்று விரும்பினார் அவரது மகன் வீரபாண்டி ராஜா. ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் சேலத்துக்கு தமது கட்சி விவகாரம் தொடர்பாக வந்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் திடீரென வீரபாண்டி ராஜாவை சந்தித்துப் பேசினார். வீரபாண்டியார் மறைந்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு ராஜாவுக்கு ஆறுதல் கூற வந்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் இரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். திராவிடக் கட்சிகளுடன் கூட்டே கிடையாது என்று வசைமாறி பொழிந்து கொண்டிருக்கும் பாமக இப்போது திமுக பக்கம் சாய முடிவு செய்துவிட்டதோ என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications