வாசனை திரவியமாகும் மாட்டு சாணம்

Subscribe to Oneindia Tamil

ஜகார்தா: கிருமி நாசினியாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்ட மாட்டுச்சாணம், இப்போது வாசனை திரவியமாகவும் புது அவதாரம் எடுத்துள்ளது.

இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டிஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட் மற்றும் ரியூதியா என்ற இரு மாணவிகள், புதிய வாசனை திரவியத்தை (Air freshner) அறிமுகம் செய்தனர். இந்த வாசனை திரவியத்தின் மணத்தில் மயங்கிப்போன நடுவர்கள், இதன் மூலப்பொருளை அறிந்து, ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் இந்த வாசனை திரவியம் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாம்.

ஜாவா தீவில் உள்ள பண்ணையில் இருந்து மாட்டுச் சாணத்தை வரவழைத்து, அதை மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, அதில் இருந்து நீரை மட்டும் முதலில் பிரித்தெடுத்து, பின்னர், அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்ந்து கொதிக்க வைத்து டிஸ்டில் முறையில் நீராக்கி சில மருத்துவ மூலிகைகளை சேர்த்து இந்த நறுமண திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாததால் உடல் நலத்திற்கு கேடு இல்லை என்று மாணவிகளும் அதை பரிசோதித்து பார்த்த விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த இரு மாணவிகளும், விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்கு உள்ள அறிவியல் கண்காட்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+