வறட்சியால் களையிழந்த கூந்தன்குளம்
நெல்லை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதால் இவ்வாண்டு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது.
நெல்லையில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கூந்தன்குளம் கிராமம் 1994ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக விளங்கி வருகி்றது. கூந்தன்குளத்தி்ற்கு சைபிரியா, நைஜிரியா, பிலிப்பைன்ஸ், மணிலா, ஜெர்மனி, லடாக் ஆகிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. பின்டைல், பிளாக் லிங்கு ஸ்டில், கிரேகிரேன், கிரின்சங், கார்கனி, பிளமிங்கோ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை, இங்கு தங்கி கூடு கட்டி முட்டை பொறிக்கும். வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளுக்கு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும்.
இங்குள்ள குளம் மற்றும் ஊர்பகுதி மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொறிக்கும் உள் நாட்டு பறவைகள், ஆடி, அமாவாசையோடு சீசன் முடிந்து தங்கள் பகுதிகளுக்கு திரும்பும். இவ்வாண்டு நெல்லை மாவட்டத்தை வறட்சி பாதித்ததால் கூந்தன்குளத்திற்கு போதிய தண்ணீர் வரவில்லை. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குளத்தில் சிறிதளவவே தண்ணீர் உள்ளது. இதனால் கூந்தன்குளத்திற்கு வந்த பல வெளிநாட்டு பறவைகள் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் திரும்பி சென்று விட்டன. தற்போது, பட்ட தலைவாத்து மட்டும் சுமார் 5 ஆயிரம் பறவைகள் குளத்தில் வசித்துவருகின்றன. மற்றபடி வெளிநாட்டு பறவைகள் எண்ண கூடிய அளவில் குறைந்த அளவில் காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications