மராட்டியத்தில் தினசரி 4 பெண்கள் கற்பழிப்பு: சட்டப்பேரவையில் தகவல்
மும்பை: மராட்டிய மாநிலத்தில் 2012ம் ஆண்டு மட்டும் தினசரி 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் பெண்களும், இளம் சிறுமியர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் காதம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். படீல், கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 1,704 பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினார். இதில் 924 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இளம் சிறுமியர்கள் என்றும் கூறினார்.
பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்களில் 127 பேர் 12 வயதிற்கும் குறைவானவர்கள். 188 பேர் 12 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றார் அவர்.
எத்தனை கேஸ் பெண்டிங்
மகாராஷ்டிரா முழுவதும் 14, 414 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 31,412 பாலியல் தொந்தரவு வழக்குகளும், 9,480 ஈவ்டீசிங் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் படீல் தெரிவித்துள்ளார்.
புகார் தருவதில்லை
புகார் கொடுக்கப்பட்டவை மட்டுமே தற்போது வெளியில் தெரியவருகிறது. ஏராளமான பெண்கள் பின் விளைவுகளுக்கு அஞ்சி புகார் கொடுப்பதில்லையாம்.
வழக்குகளை சீக்கிரம் முடிக்கனும்
13 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 2005 முதல் 2011 முடிய 10,837 பாலியல் வன்கொடுமை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண வரும் 5 ஆண்டுகளில் 100 விரைவு நீதிமன்றங்களை தொடங்க உள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். படீல் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications