திமுக செயற்குழுவில் அழகிரி, நெப்போலியன் ஆப்சென்ட்! குஷ்பு ஆஜர்!!

ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் .இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க. அழகிரி, நெப்போலியன் இருவரும் பங்கேற்கவில்லை. மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை தனியே சந்தித்து ரகசியம் பேசியவர்கள் அழகிரியும் நெப்போலியனும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திமுகவில் நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பி வைத்த நடிகை குஷ்பு இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications