இலங்கை விவகாரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆலோசனை
திருச்சி: இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்த கட்ட போராட்ட முன்னெடுப்புகள் பற்றிய மாநிலம் தழுவிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி சட்டக் கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான சீ.தினேஷ், சிபி லட்சுமணன் ஆகியோர் அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா, இளையராஜா ஆகியோரும் பங்கேற்று மாணவர்கள் போராட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேச வேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இது தொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications