தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரன் கதைகள்....
அப்போது அதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரன் அருகில் வந்து தாக்கினார். இதைப்பற்றி 5-7-1991ல் பேரவைத் தலைவர் அவை கூடியதும் இரங்கல் உரை ஆற்றுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக தீர்ப்பை படித்தார். பேரவைத் தலைவர்: 4-7-1991ல் ஆளுநர் உரை நிகழ்த்துகையில், பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து ஆளுநர் உரையாற்றுவதற்கு குறுக்கீடு செய்தார். அப்போது உறுப்பினர் தாமரைக்கனி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கைக்குப் பின்னால் நின்று கொண்டு விரும்பத்தகாத வகையில் அவர் தோள் மீது ஓங்கித் தட்டினார். இவர்கள் இருவரது செயல்களுமே விதிகளுக்கு முரண்பாடானவை என்றும், எனவே இது குறித்து பேரவைத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா 4-7-1991ல் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின் போது என்னைக் கேட்டுக் கொண்டார்.
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பனவாகவே நானும் கருதுகிறேன். எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் தாமரைக்கனி ஆகிய இரு உறுப்பினர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு பேரவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைத்து தீர்ப்பு வழங்குகிறேன் என்றார்.
22-3-1999ல் அன்று ஒரு சம்பவம் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் குத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தி ரத்தம் கொட்டியது. அதே தாமரைக்கனி பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
இதோ மற்றொரு உதாரணம்: 7-1-2011ல் திமுக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கடுமையாகத் தாக்கினார்கள்.












Click it and Unblock the Notifications