Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீடாமங்கலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை 'நகலை' வாங்க திவாகரன் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

Divakaran refuse to get Charge Sheet copy
திருவாரூர்: வீடு இடிப்பு வழக்கில் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையின் நகல்களை வாங்க முடியாது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட 9 பேர் மறுத்துவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் டிரைவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு சொந்தமான ரிஷியூர் வீடு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் சசிகலாவின் தம்பி திவாகர , ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், ரிஷியூர் ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி என்கிற குணசேகரன், தமிழ்ச்செல்வன், வீரசிவசங்கர், சக்தி ஆகிய 9 பேர்ரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 9 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் கொடுப்பதற்காக திவாகரன் உள்பட 9 பேரும் இன்று நீடாமங்கலம் ஜூடீசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த நகலை வாங்க திவாகரன் உட்பட 9 பேரும் மறுத்துவிட்டனர். தங்களுக்கு ஒரிஜினல் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9- ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+