எஸ்.பி. மீது பத்திரிக்கையாளர்கள் புகார்: நெல்லை சரக டிஐஜி சமாதானம்
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி கடுமையாக நடந்து கொண்டது தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு வெளியானதை அடுத்து வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம், மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கடுமையாக நடந்து கொண்டார். நேரடி ஒளிபரப்பு செய்யவும் தடை விதித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பிக்கு எதிராக புகார் அளித்தனர்.
இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண், செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். நடைபெற்ற சம்பவத்திற்காக எஸ்.பி. ராஜேந்திரன் வருத்தம் தெரிவித்ததாகவும், வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் டி.ஐ.ஜி. வேண்டுகோள் விடுத்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications