காஞ்சி, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருச்சியிலும்...
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களில் 13.80 ஏக்கர் நிலத்தில்,
844 அடுக்குமாடி குடியிருப்புகள் 371 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் காஞ்சிபுரத்தில், இரண்டு இடங்களில் 22.70 ஏக்கர் நிலத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 32 மேம்படுத்தப்படும் மனைகள் 303 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3.90 ஏக்கர் நிலத்தில் 344 அடுக்குமாடி குடியிருப்புகள் 50 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டத்தில், 2 இடங்களில் 12.15 ஏக்கர் நிலத்தில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
சேலம் மாவட்டத்தில் 36.20 ஏக்கர் நிலத்தில் 120 வீடுகள் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10.50 ஏக்கர் நிலத்தில் 258 அடுக்குமாடி குடியிருப்புகள் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டத்தில் 3 இடங்களில் 32.50 ஏக்கர் நிலத்தில் 722 வீடுகள் 73 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் 1.03 ஏக்கர் நிலத்தில் 35 வீடுகள் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
மற்றும் திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் 3.09 ஏக்கர் நிலத்தில் 104 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 27 வீடுகள், 25 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 4,454 அலகுகள், நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 24 மாதங்களில் முடிக்கப்படும்.