கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்... பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: நாகப்பட்டினம் அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் 120 இலங்கைத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,
வணக்கம். துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஏப்ரல் 2 ஆம் நாள், தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.
தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்று, (6.4.2013 ) அதிகாலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து, 120 ஈழத்தமிழர்கள், இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.
தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது. 120 பேர்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையின் உதவியோடு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தங்களை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications