உச்சத்தை தொட்ட காய்கறி விலை… ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்து விட்டது. இதனால் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நெல்லையில் நேற்று காய்கறி விலை உச்சத்தை தொட்டது. ஒருகிலோ பீன்ஸ் ரூ.110க்கு விற்பனையானது. ஆலங்குளத்தில் ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையானது. ஆலங்குளத்திற்கு முன்பு தினமும் 100 லாரிகளில் பீன்ஸ் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது வெறும் 3 மூடை மட்டுமே வருகிறது. இதனால் தான் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதே போல பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. நெல்லையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70க்கும், கேரட் ரூ.56க்கும், சவ்சவ், மிளகாய் ஆகியவை ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் ரூ.35க்கும், கத்தரிக்காய் ரூ.24, தக்காளி ரூ.22க்கும் விற்பனையானது. சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் இஞ்சி ஒரு கிலோ ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications