மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: சைபுனிஷா கோரிக்கை நிராகரிப்பு! சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. மேலும் நாளை மறுநாளுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி வெளியிட்டது. அதில், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதுபோல், தற்போது 71 வயதாகும் சைபுனிஷாவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 4 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தாம் நீதிமன்றத்தில் சரண் அடைய மேலும் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சைபுனிஷா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ஏற்கெனவே விதித்த உத்தரவுப்படி, ஏப். 18ந் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் சைபுனிஷாவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதேபோல் சரணடைய கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேலும் 2 மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.












Click it and Unblock the Notifications