ஐ.நா.வுக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதி பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil

ஐ.நாவுக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதியாக இருந்தவர் ஹர்தீப்சிங் பூரி. கடந்த மாதம் பூரி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சிறப்புச் செயலாளராக இருந்த அசோக்குமார் முகர்ஜி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
அவர் தமது பணிநியமன ஆவணங்களை ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அசோக்குமார் நியமனத்தை வரவேற்ற பான் கீ மூன், ஐ.நா.வில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டினார்.அப்போது, ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை அசோக்குமார் விவரித்தார் என்று நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications