5 வயது சிறுமி கற்பழிப்பு: விஷயத்தை அமுக்க பெற்றோருக்கு போலீஸ் லஞ்சம் கொடுத்த கொடுமை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் 2 நாட்களாக பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரை கண்டுபிடித்துத் தருமாறு சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் வந்தது.

இதை கேட்ட அவரது பெற்றோர் பக்கத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு, அவரது மர்ம உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியை கடத்தி 2 நாட்களாக கற்பழித்த பக்கத்து வீட்டுக்காரர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். முன்னதாக இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தார் கூறுகையில்,

முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்யத் தயங்கினர். அது தான் சிறுமி உயிருடன் கிடைத்துவிட்டாள் அல்லவா அதற்காக சந்தோஷப்படுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய காவல் நிலையம் சென்றோம். அவர்கள் என்னவென்றால் சிறுமி கிடைத்ததற்காக சந்தோஷப்பட்டு அவள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றனர் என்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+