ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஜேபிசி அறிக்கை லீக்- அருண் ஜேட்லி கடும் தாக்கு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான ஜேபிசி அறிக்கை லீக்கானது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை அறிக்கை என்பது பார்லிமென்ட்டின் சொத்து. அந்த அறிக்கை உறுப்பினர்களின் கைகளுக்கு கிடைக்கும் முன்பே அதன் முக்கிய அம்சங்கள் ஊடகங்களுக்கு கசிய விட்டிருப்பது என்பது ஒரு பிரச்சார உள்நோக்கம் கொண்டதாகும்.
நாடாளும் மன்னன் தம்மை தவறாக வழிநடத்துவதற்காக ஒரு அமைச்சரை தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இன்று பிற்பகல் வரை பெரும்பாலான ஜேபிசி உறுப்பினர்களுக்கு அந்த வரைவு அறிக்கை கிடைக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது தொலைத் தொடர்புத் துறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கவில்லை. மாறாக முதலில் பணம் கொடுப்போருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்ற கொள்கையையே கடைபிடித்தது என்பதுதான் உண்மை என்றார்..












Click it and Unblock the Notifications