ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பி.எஸ்.டி.சாய் தலைமையில் நிபுணர் குழு அமைப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக டை ஆக்சைடு என்ற நச்சு வாயு வெளியேறியதை அடுத்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஆலையை மூடும்படி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஸ்டெர்லைட் சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், வைகோ, தூத்துக்குடி பாத்திமா பாபு, வழக்கறிஞர்கள் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனித்தனியே மனு செய்திருந்தனர். அவர்களும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.
மனு மீதான விசாரணையின் போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இன்று அந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவை நீதிபதிகள் அறிவித்தனர். இந்தக் குழுவின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிபுணர் கமிட்டியில் ஐஐடி பேராசிரியர் ரெஜி பிலிப் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு உதவுவதற்கு மாசு கட்டுப்பட்டு வாரிய பிரதிநிதியாக மோகன் நாயுடு என்பவரும், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பொதுமேலாளர் சுமதி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி,அதன் வாயு வெளியேற்றம், பாதிப்பு, தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் 29 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications