வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.19,665 கோடி தர ஜெயலலிதா கோரிக்கை
முதல் - அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வறட்சி கோரிக்கை மனு ஒன்று மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். இந்த வறட்சி கோரிக்கை மனுவில், வேளாண்மைத் துறையில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டதற்காக 9,286 கோடியே 20 லட்சம் ரூபாய்; விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை மாற்றியமைத்த வகையில் கூட்டுறவு துறைக்கு 182 கோடியே 10 லட்சம் ரூபாய்;
விவசாயிகளுக்கு பயிரிழப்பு நிவாரணம் வழங்கிய வகையில் மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவினத்திற்காக 1,376 கோடியே 71 லட்சம் ரூபாய்; வேளாண்மை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களுக்காக 2,424 கோடியே 47 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இழப்பீடாக 2,661 கோடியே 32 லட்சம் ரூபாய்; வன விலங்குகளை பாதுகாப்பதற்காக 5 கோடி ரூபாய்; குடிநீர் வழங்கல் பணிகளுக்காக 1,195 கோடியே 79 லட்சம் ரூபாய்; கால்நடை பராமரிப்பு துறைக்கென 247 கோடியே 16 லட்சம் ரூபாய்; பண்ணை குட்டை மீன் வளர்ப்புக்கென 12 கோடியே 47 லட்சம் ரூபாய்; பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பிற்கென 1,390 கோடியே 31 லட்சம் ரூபாய்; ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் சத்துணவு வழங்க 333 கோடியே 60 லட்சம் ரூபாய்; பொது விநியோகத் திட்டத்திற்கென 7.92 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 550 கோடி ரூபாய்; என மொத்தம் 19,665 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கான நிவாரண கோரிக்கைகள் அடங்கும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.