தேசிய அளவில் ஒரு மாற்று அணியை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்குகிறது: பிரகாஷ்காரத்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியையும், பாரதிய ஜனதா கூட்டணியையும் தோற்கடிக்கும் வகையில் உத்திகளை வகுக்க இருக்கிறோம். காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசு பின்பற்றி வரும் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலுக்கு பின்னர் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் உருவாகாது. தேசிய அளவில் மாற்று அணி தேவை. இதனை உருவாக்கும் முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. மத்தியில் அடுத்து யார் ஆட்சி செய்வார் என்பதனை இடது சாரிக்கட்சிகள் தான் தீர்மானிக்கும். இதற்கான மாநில கட்சிகள் சிலவற்றுடன் நாங்கள் தேர்தல் உடன்பாடு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications