பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. காஷ்மீர், டெல்லி, வட இந்தியா குலுங்கியது.. பப்புவா நியூ கினியாவிலும்!
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கட்டடங்கள் மிக பயங்கரமாகக் குலுங்கின. அங்கு ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. இந்தப் பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்தன. ஆனால், சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை..
முன்னதாக தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது இந்தத் தீவின் கட்டிடங்கள் குலுங்கின. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ந மக்கள் அச்சத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். சேத நிலவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் எரிமலைகள் சீற்றத்தோடு அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ளது இந்தத் தீவு.