சட்டசபையில் மரக்காணம் கலவரம்- விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி அரசின் பதில் கிடைத்ததும் விவாதிக்க அனுமதிக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியான மரக்காணத்தில் பாமகவின் மாமலப்புரம் மாநாட்டுக்குச் சென்றோருக்கும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் வடதமிழகத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தே.மு.தி.க. இடது சாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தின. இது தொடர்பாக சபாநாயகர் கூறுகையில் அரசின் உரிய பதில் கிடைத்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.