For Quick Alerts
For Daily Alerts
Just In
ராமதாஸ் விடுதலை: தஞ்சை,அரியலூர் மாவட்டங்களில் 144 தடை
அரியலூர்: மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை சந்திக்க டாக்டர் ராமதாஸ் வரக்கூடும் என்று கூறப்படுவதால் தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
தடையை மீறி ஆர்பாட்டம் செய்த வழக்கில் மே1ம் தேதி கைதான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருச்சி சிறையிலிருந்து இன்று காலை விடுதலை ஆனார்,
இராமதாஸ் சிறைக்கு சென்றதே மரக்காணம் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட தாக கூறப்படும் தஞ்சை விவேக் மற்றும் அரியலூர் செல்வராஜ் கொலைகளுக்கு தடையை மீறி கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் செய்த காரணத்திற்காகத்தான்.
எனவே சிறையில் இருந்து விடுதலையான டாக்டர் இராமதாஸ் இவ்விருவர்களின் இல்லங்களுக்கும் சென்று அவர்களின் உறவினர்களை சந்திப்பார் என்று நினைத்த அரசு தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 144 தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments
English summary
Section 144 has been slapped in Tanjore and Ariyalur to avoid Vanniar crowd.
Story first published: Saturday, May 11, 2013, 15:49 [IST]