பிரம்மாண்ட பேரணிக்கு 13 ரயில்கள்.. லாலுவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
டெல்லி: பீகாரில் பிரம்மாண்ட பேரணி நடத்திய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவை வருமான வரித்துறை நெருக்கி வருகிறது. பேரணிக்கான செலவு விவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகாரில் கடந்த 15-ந் தேதி லாலு பிரசாத் கட்சி சார்பில் மிகப் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்காக 13 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. 5 ஆயிரம் பேருந்துகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ரயில்வே துறைக்கு மட்டும் ரூ1.11 கோடியை லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் செலுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தற்போது வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு இதேபோல் நவம்பர் 4-ந் தேதியன்று ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. அதற்கும் ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தொகை செலுத்தப்பட்டது. அப்போதும் இதேபோல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications