பின் வாசல் வழியே வெளியேறிய சீமான்: போலீசாரோடு, தொண்டர்களும் சேர்ந்து மண்டபத்தில் தேடுதல்
கடலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான். தலைமையில்,கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான்.
இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் அவசரப்படுத்தினர். ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். ஏரக்குறைய அப்போது 10 மணியாகி விட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர்.
ஆனால், போலீசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் . இதனால் அதிரடியாக 10.20 மணி அளவில் மண்டபத்துக்குள் நுழைந்த போலீசார் மேடைப் பக்கம் சென்றனர்.
அதுவரை மேடையில் பேசிக்கொண்டிருந்த சீமான், போலீஸைக் க ண்ட நொடிப் பொழுதில், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென பக்கவாட்டுக் கதவு வழியே வெளியேறி, வேகமாக காரில் ஏறிப் பறந்துவிட்டார்.
போலீஸாரோடு சேர்ந்து தொண்டர்களும், சீமானை மண்டபத்திற்குள் தேடினர். இதுவரை சீமான் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது












Click it and Unblock the Notifications