சேலம் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை… பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கொலைவழக்கு ஒன்றில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் தனது அறையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications