உங்களில் யார் அந்த 3000 கோடிக்கு சொந்தக்காரர்? - தேடும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க லாட்டரியில் ரூபாய் 3000 கோடியை ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என காண உலக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவு அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய தொகையான 590 மில்லியன் டாலருக்கு, அதாவது நமது ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3000 கோடி பரிசுத்தொகைக்கு பவர்பால் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 232 கோடியே 90 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். கிட்டத்தட்ட 42 நாடுகள் இப்போட்டியில் பங்கெடுத்தன. அதன் வரிசை இலக்கங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன, அதாவது 10, 13, 14, 22,52 மற்றும் பவர் பால் 11 ஆகும்.

இதன் குலுக்கல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. குறிப்பிட்ட இந்த லாட்டாரி சீட்டை புளோரிடா மாகாண செப்ரில்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+