இனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...: இந்திய-அமெரிக்க மாணவி சாதனை
வாஷிங்டன்: 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவியை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போன்களில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அதி நவீன வசதிகள் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. ஆனால், எந்திர வாழ்க்கையில் செல்போனிற்கு சார்ஜ் போடுவதற்குத் தான் நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை. இதற்கு ஒரு விடிவு காலமாக 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சார்ஜர் கண்டுபிடிப்பு...
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவருபவர் ஈஷா கரே.இந்த இளம் பெண் 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் அதி நவீன சார்ஜர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

விருதும், நிதி உதவியும்...
இக்கண்டுபிடிப்பிற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் ஈஷா பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.

எனக்காக கண்டுபிடித்தேன்...
தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று கூறியுள்ளார் ஈஷா.

பல மடங்கு பயன்....
சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.

அதிகப்பயன்பாடு மிக்கது...
இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications