2006- மாலேகான் குண்டு வெடிப்பு- 4 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 37 பேரை பலி கொண்ட 2006ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவ வ்ழக்கில் 4 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ராம்ஜி கல்சங்ரா என்பவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் அருகில் உள்ள சந்தை பகுதியில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் படு காயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் இந்து தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்று அசீமானந்தா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு மறு விசாரணை நடத்தி இந்து தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இன்று மகாராஷ்டிரா சிறப்பு நீதிபதி பிரித்விராஜ் சவான் முன்னிலையில் 5 வால்யூம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் சர்மா, தான் சிங், ராஜேந்திர சவுத்ரி மற்றும் மனோகர்சிங் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்ரா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்..
இதே மாலேகானில்2008 ஆம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக இந்து அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங், முன்னாள் லெப். கேணல். ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications