2006- மாலேகான் குண்டு வெடிப்பு- 4 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 37 பேரை பலி கொண்ட 2006ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவ வ்ழக்கில் 4 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ராம்ஜி கல்சங்ரா என்பவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் அருகில் உள்ள சந்தை பகுதியில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் படு காயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் இந்து தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்று அசீமானந்தா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு மறு விசாரணை நடத்தி இந்து தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இன்று மகாராஷ்டிரா சிறப்பு நீதிபதி பிரித்விராஜ் சவான் முன்னிலையில் 5 வால்யூம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் சர்மா, தான் சிங், ராஜேந்திர சவுத்ரி மற்றும் மனோகர்சிங் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்ரா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்..

இதே மாலேகானில்2008 ஆம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக இந்து அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங், முன்னாள் லெப். கேணல். ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+