இரண்டு தலை, ஒரு உடலுடன் பெங்களூரில் பிறந்த பெண்குழந்தை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இரண்டு தலை ஒரு உடலுடன் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
சரணப்பா என்ற கூலித் தொழிலாளியின் மனைவி மாலாஸ்ரீ வயது 25 . இவர்களுக்கு திருமணமாகி பத்து மாதங்கள் ஆகிறது. பெங்களூரிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ராய்ச்சூர் என்ற ஊரில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
வேலை விஷயமாக தற்போது சென்னை-பெங்களூரு சாலை, எலக்ட்ரானிக் சிட்டி அருகில் குடிபெயர்ந்தனர் இத்தம்பதியினர். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த மாலாஸ்ரீ பிரசவத்திற்காக சிங்கசந்திரா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த திங்களன்று சுகப்பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இரண்டு தலையுடன் பிறந்த அக்குழந்தை, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இறந்தது.












Click it and Unblock the Notifications