For Daily Alerts
Just In
குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் ரெய்டு!
மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட போலீஸ் குழு, ஞாயிற்றுக்கிழமை குருநாத் வீட்டில் சோதனை நடத்தியது.
குருநாத்தின் வீட்டுக்கு வந்து போனவர்கள் யார் யார் என காவலரிடம் இருந்த பதிவேடுகளை வாங்கி ஆராய்ந்தனர். காவலர்களிடமும் வீட்டிலிருந்தவர்களி்டம் விசாரணை நடத்தினர்.
மேலும் குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களிலும் சோதனை நடத்தினர்.
குருநாத் நிர்வாக இயக்குநராக உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
குருநாத் தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மே 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
English summary
A Mumbai police team Sunday raided the house of Gurunath Meiyappan, the team principal of Chennai Super Kings (CSK) and son-in-law of Indian cricket boards chief N.Srinivasan.
Story first published: Monday, May 27, 2013, 10:47 [IST]