மூத்த காங்கிரஸ் தலைவர் கர்மாவை 78 தடவை கத்தியால் குத்திய நக்சலைட்டுகள்
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடந்தது. இந்த பேரணியில் சாதாரண மக்களைப் போன்று உடை அணிந்த 250 நக்சலைட்டுகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மாவை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலியான கர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் நக்சலைட்டுகள் கர்மாவை துப்பாக்கியால் பலமுறை சுட்டதுடன், கூர்மையில்லாத பொருளால் தாக்கி காயப்படுத்தியுள்ளதும், கத்தியால் 78 முறை குத்தியதும் தெரிய வந்துள்ளது.
பேரணியில் 250 அல்ல மாறாக குறைந்தது 500 நக்சலைட்டுகளாவது கலந்து கொண்டு தாக்கியிருக்கக்கூடும் என்று மாநில உளவுத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications