ஊட்டி கோடை விழா பரிசுக் கோப்பையில் தலைகீழாக தேசியக் கொடி
ஊட்டி: ஊட்டி கோடை விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுக்கோப்பைகளில் தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் மலர்த் தோட்டம், பழத்தோட்டம், காய்கறி, பழங்கள் சேகரிப்பு என கோடை விழா அரங்கில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த காட்சி அரங்கு அமைத்திருந்தவர்கள், பழத் தோட்டங்களுக்கும், கோடை விழா நிகழ்ச்சிகளில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பரிசு கோப்பையின் முகப்பில், தமிழ்நாடு அரசு வாய்மையே வெல்லும் என்ற வாசகம் அடங்கிய அரசு முத்திரை சின்னம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், தேசிய கொடியின் படம் கொண்ட ஸ்டிக்கர் தலைகீழாக ஒட்டப்பட்டிருந்தது.
தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை அதிகாரிகளிடம் சொல்லவும் முடியாமல், அதை வெளியே சொல்லாமல் இருக்கவும் முடியாமலும் பலர் தவித்தனர். முடிவில், இந்த மெகா தவறு குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
என்ன ஒரு அசமஞ்சம், அலட்சியம் பாருங்க...!












Click it and Unblock the Notifications