மூக்கில் ஆக்ஸிஜன் ட்யூப் + கையில் பேனா = 52.6% மதிப்பெண்கள்
டெல்லி: ஆக்ஸிஜன் கருவி இல்லாமல் 90 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாத பள்ளி மாணவி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 52.6% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகளான நேகா மெண்டிராட்டா சென்ற வருடம் மார்ச் முதல் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆக்ஸிஜன் கருவியின் உதவியுடன் தான அவர் சுவாசித்து வந்தார்.
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் பெற்று வந்தார் நேகா. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படத் தக்க வகையில் ஆக்ஸிஜன் கருவி ஒன்றின் உதவியோடே அவர் சுவாசித்து வந்தார்.
தொடர்ந்து 90 நிமிடங்களுக்குமேல் ஆக்சிஜன் கருவி உதவி இல்லாமல் இருந்தால், கடினமான இருமல்களால் அவதிப்பட வேண்டி வரும் நிலையில் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார் நேஹா. மூச்சுக்குழாய்கள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.
இந்நிலையில் மனம் தளராத நேஹா, கடந்த மார்ச்சில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளில் 52.6 சதவிகிதம் மதிப்பெண் பெற்று, அவர் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
ஓவியத்திலும்,கை வேலைப்பாடுகளிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ள நேஹா ஆக்ஸிஜன் துணையோடு நல்ல மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம்வகுப்பில் தேர்வானது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.












Click it and Unblock the Notifications