ஒன்இந்தியா தமிழ் செய்தி எதிரொலி- டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட கரூர் கலெக்டர்!
கரூர்: கரூர் மாரியம்மன் திருவிழாவுக்காக தற்காலிகமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டார்.
ஒன்இந்தியா தமிழ் இணயைதளம் இதுதொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக கலெக்டர் ஜெயந்தி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மேலும் இந்தக் கடையைத் திறக்க உத்தரவிட்ட அதிகாரிகளுக்கும் நல்ல டோஸ் கிடைத்ததாம்.

தமிழகத்தில் புகழ் பெற்ற திருவிழாக்களில் கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவின் போது, பொது மக்களை மகிழ்ச்சி படுத்த தனியார் சார்பில் சிறு அளவில் தற்காலிக பொழுதுபோக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக அரசு பசுபதிபாளையம் பாலம் அருகில் தற்காலிக டாஸ்மாக் கடையை திறந்து வைத்து குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
கோவிலுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளே இருக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால் கோவில் திருவிழாவில் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து திடீர் புரட்சி செய்தது தமிழக அரசு.
தற்காலிக டாஸ்மாக் கடைகள் அமைப்பதால் மது குடித்துவிட்டு ஆட்டம் போடும் குடிகாரர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், பெண்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும் என்றும் பலரும் அச்சப்பட்டனர்.
தமிழக அரசின் இந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய செயலாளரும், தமிழக ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டினா சாமி மற்றும் தமிழக மருத்துவர் பேரவை மாநில தலைவர் காளிமுத்து ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்ற செய்தி ஒன் இந்தியா தமிழ் செய்தி இணையதளத்தில் வெளியானது.
இது கலெக்டர் ஜெயந்தியின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த கலெக்டர் ஜெயந்தி, கரூர் தாசில்தார் பாலசுப்பிரணி ஆகியோர் சம்பவத்தை இடத்தை ஆய்வு செய்தனர்.
அங்கு தற்காலிகமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு வராமல் தற்காலிக டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்ட டாஸ்மாக் அதிகாரி மீது உரிய நவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.
உண்மைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து, பொது மக்கள் நலன் மீது அக்கரை செலுத்திய கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்திக்கு பொது மக்கள் மனதார பாராட்டினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications