இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி: 10 ஆண்டுகளில் 17.7% அதிகரிப்பு
டெல்லி: நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக (1,21,05,69,573) அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி (62,31,21,843). பெண்களின் எண்ணிக்கை 58.7 கோடியாகுமம் (58,74,47,730). இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத அதிகரிப்பாகும்.
தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
2001 முதல் 2011ம் வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இதில் ஆண், பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக தலா 9 கோடி அதிகரித்துள்ளது.

நாட்டில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 68.8 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலும் 31.2 சதவீதம் பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 949 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 929 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 923 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 905 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

தேசிய அளவில் கல்வியறிவு பெற்றோரின் அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 80.9 சதவீதமும், பெண்கள் 64.6 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
-
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications