தேர்ச்சி - விருதுநகரை 'ஓவர் டேக்' செய்து கன்னியாகுமரி முதலிடம்-6வது இடத்தில் சென்னை!
சென்னை: வழக்கமாக பத்தாவது வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்து வரும் விருதுநகர் மாவட்டம் இந்த முறை 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டம் பிடித்துள்ளது.
கடந்த பல வருடங்களாகவே பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவியர்தான் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு விருதுநகைர ஓவர்டேக் செய்து விட்டது கன்னியாகுமரி.
கன்னியாகுமரி மாவட்டத்தி்ல பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியவர்களில் 97.29 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்ட தேர்ச்சி விகிதம் 95.08 சதவீதமாகும். 5வது இடத்தை அது பிடித்துள்ளது.
2வது இடத்தில் தூத்துக்குடியும், 3வது இடத்தில் ஈரோடும் வந்துள்ளன. திருச்சிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி விகிதம் - மாவட்ட வாரியாக
கன்னியாகுமரி - 97.29
தூத்துக்குடி 95.42
ஈரோடு - 95.36
திருச்சி - 95.14
விருதுநகர் - 95.08
சென்னை - 94.61
புதுச்சேரி - 94.45
கோயமுத்தூர் - 94.12
மதுரை - 93.44
நாமக்கல் - 93.22
திருப்பூர் - 93.07
திருநெல்வேலி - 92.86
சிவகங்கை - 92.72
கரூர் - 90.72
பெரம்பலூர் - 90.38
ராமநாதபுரம் - 90.28
தேனி - 89.83
உதகமண்டலம் - 89.81
சேலம் - 88.93
தஞ்சாவூர் - 88.77
கிருஷ்ணகிரி - 88.62
திண்டுக்கல் - 88.55
காஞ்சிபுரம் - 86.86
திருவள்ளூர் - 86.85
புதுக்கோட்டை - 85.74
தர்மபுரி - 85.51
திருவாரூர் - 83.14
வேலூர் - 83.09
அரியலூர் - 82.41
விழுப்புரம் - 81.99
நாகப்பட்டினம் - 79.53
திருவண்ணாமலை - 78.9
கடலூர் - 75.25












Click it and Unblock the Notifications