அப்படியே வாஜ்பாயி மாதிரியே இருக்கிறார் ம.பி. முதல்வர் செளகான்- அத்வானி பேச்சு

மோடிக்கு பாதகமாக முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. செளகான் குறித்து அத்வானி கூறுகையில், வாஜ்பாய் எப்போதும் எளிமையானவர், இரக்கக் குணம் மிக்கவர். பிடிவாதம் இல்லாதவர், முரட்டுத்தனம் இல்லாதவர். அதேபோல செளகானும் எளிமையாக இருக்கிறார், அடக்கமாக இருக்கிறார். வாஜ்பாயியைப் போல இருக்கிறார்.
நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக வந்தபோது ஏற்கனவே அது நன்கு வளர்ந்த மாநிலமாக இருந்தது. அதை மேலும் சிறப்பாக்கினார் மோடி. இதை நான் மோடியிடமே சொல்லும்போது ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்த குஜராத்தை நீங்கள் பன்மடங்கு உயர்த்தியுள்ளீர்கள் என்று கூறுவேன்.
ஆனால் மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் போன்றவை அப்படி இல்லை. அவை வளர்ச்சி அடையாத மாநிலங்களாக இருந்தன. ஆனால் சிவராஜ் செளகான் வந்தபிறகு மத்தியப் பிரதேசம் பல மடங்கு வளர்ச்சியைச் சந்தித்தது. இருப்பினும் இன்னும் அவர் எளிமையான மனிதராக இருக்கிறார். அது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
மோடியை கீழே இறக்கி, செளகானை மேலே உயர்த்தி பேசியுள்ள அத்வானியின் இந்தப் பேச்சு மோடி ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
எப்போதுமே மோடியை விரும்பாதவர் அத்வானி. எனவே அவர் செளகானை மோடிக்கு எதிராக கொம்புசீவி விடுகிறாரோ என்ற சந்தேகமு் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications