வெயிலுக்கு மருந்துகளும் தப்பலயாம்... ஏசி இல்லாம உருகுதாம்!!!
ஹைதராபாத்: ஆந்திரா முழுவதும் கொளுத்துகிற வெயிலுக்கு மருந்துக் கடைகளில் பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் கூட கூழாகிப் போய் கசிந்துருகி வருகிறதாம்.
கடுமையான வெப்ப நிலை ஒரு காரணமாக இருந்தாலும், ஓட்டை உடைசல் பிரிட்ஜுகள் மற்றும் மோசமான பராமரிப்பும் கூட இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பல மருந்துக் கடைகள், மருந்து நிறுவனங்களில் பிரிட்ஜ் வசதி கூட இல்லாத நிலை காணப்படுகிறதாம். இதுவும் மருந்துகள் உருக இன்னொரு காரணமாம்.

அரசு இயந்திரமும் தப்பல...
ஆந்தி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆந்திர மாநில சுகாதார அடிப்படைக் கட்டமைப்புக் கழகத்தின் கிட்டங்கிகள், மருந்து விற்பனை நிலையங்களிலும் கூட மருந்துகள் உருகிப் போய் வருகின்றனவாம்.

ரேனிட்டைடின்....
குறிப்பாக ரேனிட்டைடின் மருந்துகள்தான் அதிக அளவில் உருகிப் போய் விடுகின்றனவாம். இந்த மருந்து அசிடிட்டி காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்காக மக்கள் சாப்பிடுவதாகும்.

உருகும் மருந்துகள்...
அதிக அளவில் வெப்ப நிலை ஏர்பட்டால் இதுபோன்ற மருந்துகள் உருகிப் போய் விடும். இவை பெரும்பாலும் டியூப் மாத்திரைகள் ஆகும். இவற்றை முறையான சீதோஷ்ணத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் பலர் இதில் அலட்சியம் காட்டுகின்றனராம். இந்த மாத்திரைகளில் செல்லுலோஸ்இழைகள் அதிகம் இருக்கும். இவை வெப்பநிலையில் உருகி, இளகிப் போய் விடும்.

பர்ஸ்ட் மாத்திரைய காப்பாத்துங்கப்பா...
இந்த அவல நிலை குறித்து மாநில சுகாதாரத்துறை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறதாம். இதைத் தடுக்கக்கூட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லையாம்.

பாவம் மக்கள்...
எனவே இந்த மாத்திரைகளை வாங்கும் மக்கள், அவற்றை வீரியம் குறைந்த, கிட்டத்தட்ட கெட்டுப் போன மாத்திரைகளாகவே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications