நகைக்கடை நடத்தி ரூ. 15 கோடி மோசடி செய்த அண்ணன் தம்பி தலைமறைவு
கோவை: கோவையில் நகைக்கடை நடத்தி ரூ.15 கோடி நகை மோசடி செய்ததாக அண்ணன் தம்பி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரிய கடை, ராஜா வீதி, காந்திபுரம், கிராஸ்கட் வீதியில், சொர்ணலட்சுமி, லாவண்யா என்ற நகைக்கடைகள் உள்ளன.
25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைகளை அசோக்குமார், பாலாஜி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள்.
இந்த கடைகளுக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட நகை உற்பத்தியாளர்கள் நகையை சப்ளை செய்து வந்திருக்கின்றனர். தவிர பொதுமக்களிடமும் நகைச் சீட்டு நடத்தி, பணம் வசூலித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, லாவண்யா, சொர்ணலட்சுமி நகைக் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, நகை உற்பத்தியாளர்கள், அசோக்குமார் மற்றும் பாலாஜி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் நகை சீட்டுக்காக வசூலிக்கப்பட்ட பணம் ரூ.2 கோடியும், நகை சப்ளை செய்ததற்காக உற்பத்தியாளர்கள் பணம் ரூ.15 கோடியும் தராமல் இருவரும் தலைமறைவாகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான அசோக்குமார், பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications