கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்ட லண்டன் தம்பதிகள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு நன்றி
சென்னை: கடத்தல் கும்பலிடம் சிக்கி மீண்ட, லண்டன் தொழில் அதிபர் தம்பதிகள், சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் கணபதி பிள்ளை தவராஜா. இவர் தனது மனைவி ஜலஜா, மற்றும் மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர்கள், கடந்த மே 29 ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர்.

பின்பு, இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனில் ரூ.1கோடி தர வேண்டும் என, லண்டனில் உள்ள அவரது மகள் தர்ஷினியிடம் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தர்ஷினி இந்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், காவல் துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் மற்றும் இணை ஆணையர் சண்முகவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டடது.
இந்த தனிப்படை போலீசார், அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன் பேரில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மந்தாரக்குப்பத்தில் லண்டன் வாழ் இலங்கை தம்பதியரை போலீசார் மீட்டனர். மேலும், கடத்தல்காரர்களில் சத்யா என்பவரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்ட, லண்டன் தொழிலதிபர் கணபதி பிள்ளை தம்பதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலிலதாவை நேரில் சந்தித்து , தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டு போலீஸ் பெஸ்ட்
அவர்களின் நன்றிக்கு பதில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு போலீஸ் படை எப்போதுமே சிறந்தது. இந்தியாவிலேயே சிறந்ததான தமிழ்நாடு போலீஸ் டீம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்க்கு இணையானது என்று பெருமிதத்துடன் கூறினார்.












Click it and Unblock the Notifications