அத்வானிக்கு நன்றியே இல்லாமல் நடந்து கொண்டுள்ளது பாஜக - திக்விஜய் சிங் சாடல்

நரேந்திரமோடி பாஜக தேசிய பிரசாரக் குழுத்தலைவராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியானதும் அதுகுறித்து திக்விஜய் சிங் கருத்து தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்தில், அத்வானிக்காக நான் மனம் இரங்குகிறேன். பாஜக அவரிடம் நன்றேய இல்லாமல் நடந்து கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவுக்கு 182 எம்.பிக்கள் கிடைக்க அத்வானியே காரணம் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
பாரதிய ஜனசங்கம் என்று இருந்த கட்சிதான் பின்னர் பாஜகவாக உருமாறியது. இந்த உருமாற்றத்தின் முக்கியப் பங்காளர்கள் வாஜ்பாயி மற்றும் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. 1980ம் ஆண்டு பாஜக உருவானது. அன்று முதல் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அத்வானி பங்கெடுத்து வந்தார். ஆனால் முதல்முறையாக அவர் கோவா கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications