மாநிலங்களவை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நியமனம்

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான பார்வையாளராக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை பரிசீலிப்பது, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி போன்றவை தேர்தல் பார்வையாளரின் முன்னிலையில் நடைபெறும்.
தேர்தலில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் போன்றவை அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியை தேர்தல் பார்வையாளர் மேற்கொள்வார்.
தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவைத் தேர்தல் பார்வையாளருமான பிரவீண் குமார் அனுப்பி வைப்பார் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் யார்? மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனும், உதவி தேர்தல் அதிகாரியாக, சட்டப் பேரவை இணைச் செயலாளரான பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் இல்லாத நேரத்தில், உதவித் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் அதிகாரிகளிடம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) காலை 11 முதல் மாலை 3 மணி வரை உரிய ஆவணங்களுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 17-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் வாக்கெடுப்பு அவசியமாக இருந்தால், சட்டப் பேரவையின் குழுக் கூட்ட அறையில் வாக்குச் சாவடி அறை ஏற்பாடு செய்யப்படும். வரும் 27-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications