பாஜக கூட்டத்தில் அத்வானி ஆப்சென்டானது கட்சியின் வருங்கால சரிவுக்கு அடித்தளம்: ஜி.கே. வாசன்
சென்னை: கோவாவில் நடக்கும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர் அத்வானி கலந்து கொள்ளாதது பாஜகவின் சரிவுக்கு அடித்தளம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தமிழகம் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை கர்நாடக அரசு செயல்படுத்திட வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் இந்தியா முழுவதும் பொருளாதாரம் மேம்படும்.
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்வு செய்யும் என்றார்.
கோவாவில் நடந்து வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, அவர் கூறுகையில்,
கோவாவில் நடக்கும் பாஜக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் பங்கேற்காதது பாஜகவின் வருங்கால சரிவுக்கு அடித்தளம். அவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததையே இது காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications