ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்து: 13 பேர் பலி, 47 பேர் மாயம்

இந்தினோசியா வழியாக ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு 60 அகதிகளுடன் ஒரு படகு கிளம்பியது. அந்த படகு கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 65வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 13 பேர் பலியாகினர். இதை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது.
மீதமுள்ள 47 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயமானவர்களை தேடி வருகின்றனர். 2 நாட்களாகியும் யாரும் இதுவரை உயிருடன் கரை ஏறவில்லை. அதனால் அவர்களும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கை, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு படகில் வருவதும் வழியில் விபத்துக்குள்ளாகி பலர் இறப்பதும் தொடர் கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications