திருச்சி சிறையில் உண்ணாவிரதம்.. பாமகவினர் போராட்டத்தை கைவிட அன்புமணி வேண்டுகோள்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச்சட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியைச்சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறை களில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 24 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
திருச்சி மத்திய சிறையில் துணைப் பொதுச் செயலாளர் அகோரத்தை தனிமை சிறையில் அடைப்பதை கைவிட வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியினரை மற்ற கைதிகளுடன் ஒன்றாக அடைத்து வைப்பதை தவிர்க்க வேண்டும், உணவு, குடிநீர் வழங்குவதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆலயமணி, அகோரம், மாவட்ட செயலாளர் ம.கா.ஸ்டாலின், வன்னியர் சங்க துணைத்தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பாட்டாளிமக்கள் கட்சி நிர்வாகிகள் 24 பேரும் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நிலை இன்று மோசமடைந்ததைத் தொடர்ந்து பலருக்கு குளுக்கோஸ் செலுத்தப் பட்டு வருவதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த அடக்குமுறைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்திக் கொள்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் துடிப்பு மிக்க நிர்வாகிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே திருச்சி மத்திய சிறையில் அடக்குமுறைகளை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பா.ம.க.வினர் அனைவரும் தங்களின் போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications