சோனியா சொன்னா விளக்குமாத்த எடுத்து... அமைச்சரின் புளகாங்கித பேச்சு!

மஹந்த்தின் இந்தப் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. குறிப்பாக காங்கிரஸாரே இந்த ஜால்ராவின் சத்தம் தாங்க முடியாமல் சலசலப்படைந்துள்ளனராம்.
சட்டிஸ்கரைச் சேர்ந்த மஹந்த் மத்திய அமைச்சரவையில் துணை அமைச்சராக இருக்கிறார். சமீபத்தில் இவரை சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி அறிவித்தார். இதனால் புல்லரித்துப் போய்க் கிடக்கிறார் மஹந்த்.
ஒரே நேரத்தில் இரண்டு பதவி என்பதால் அவருக்குத் தலை கால் புரியவில்லை. சோனியா காந்திக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளுகிறார்.
சோனியா காந்தி குறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன உத்தரவிட்டாலும் அதை நான் உடனே செய்வேன். ராகுல்ஜி சொன்னாலும் உடனே செய்வேன். அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதே எனது கடமை.
துடைப்பத்தை எடுத்து சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கு என்று சொன்னாலும் உடனே செய்வேன். நிச்சயம் செய்வேன். எனக்கு அவர்கள் இடம் கட்டளைதான் முக்கியம் என்று புல்லரித்துச் சொல்லியுள்ளார் மஹந்த். இவருக்கு வயது 58 ஆகிறது.
ஜெயில் சிங் கூட இப்படித்தான்!
இப்படி காங்கிரஸ்காரர் ஒருவர் புல்லரித்து தாறுமாறாகப் பேசுவது இது முதல் முறையல்ல. முன்பு கியானி ஜெயில் சிங்கை குடியரசுத் தலைவர் வேட்பாளராக இந்திரா காந்தி அறிவித்தபோது கூட அவரும் இதே வார்த்தைகளைத்தான் உச்சரித்தார் என்பது பழைய கதை.












Click it and Unblock the Notifications