விஜயகாந்த்துக்கு காங். வைத்த கூட்டணி செக்.!

இந்த நிபந்தனையின்பேரில்தான் தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் யோசித்து வருவதாகவும் தெரிகிறது.
வழக்கம்போல இந்த முறையும் விஜயகாந்த்தை அத்தனை கட்சிகளும் நேக்காக ஓரம் கட்டி விட்டன. திமுகவிடம் போக முடியாத நிலையை அக்கட்சி ஏற்படுத்தி விட்டது. கம்யூனிஸ்டுகள் ஆதரவை எதிர்பார்க்கலாம் என்றால் அவர்களையும் ஜெயலலிதா திடீரென தன் பக்கம் இழுத்து விட்டார்.
இதனால் வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கதவைத் தட்ட வேண்டியதாயிற்று விஜயகாந்த்துக்கு. காங்கிரஸ் கட்சியிடம் உள்ள ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்றால் கனிமொழியை எப்படியாவது வீழ்த்தி விடலாம் என தேமுதிக கணக்குப் போடுகிறது.
ஆனால் இந்த தம்மாத்துண்டு ஆதரவைத் தருவதற்காக மிகப் பெரிய நிபந்தனையை தேமுதிகவுக்கு காங்கிரஸ் விதித்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
அதாவது ராஜ்யசபா தேர்தலில் எங்களது ஆதரவை வாங்கிக் கொள்ளுங்கள். அதேசமயம், லோக்சபா தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் வைக்கும் நிபந்தனையாம். இதை விஜயகாந்த் கட்சி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இப்போதைக்கு இந்தப் பிரச்சினையை முடிப்போம். அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் விஜயகாந்த் இந்த முடிவுக்கு வந்தாராம்.












Click it and Unblock the Notifications